Tuesday, August 2, 2011

என்னை நீ எப்படிப் பார்க்கிறாயோ?
எனக்குத் தெரியாது!
உன்னை நான் நானாகவே
பார்க்கிறேன்!
அதனால்தான் என்னால் எதையுமே
தாங்கிக் கொள்ள முடிவில்லை!
உனக்கொன்றென்றால்
அது எனக்கும்தானே?
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது உன் வாழ்க்கை!
வெறும் வரிகளால் விளக்க முடியாதது என் வேதனை!

புதிய கவிதை

இவை வெறும் வார்த்தைகள் உனக்கு…
இதுதானே வாழ்க்கை எனக்கு…
எனக்குத் தெரியும் இந்த வரிகள் உனக்குப் புரிந்திருக்காது!
புரியாமலே இருக்கட்டும்!
புரியாமல் இருக்கும் வரைதான்
இது புதிய கவிதை!